நிச்சயம் குண்டு வெடிக்கும்! தேர்தல் அதிகாரிக்கு மிரட்டல் கடிதம்

 

நிச்சயம் குண்டு வெடிக்கும்! தேர்தல் அதிகாரிக்கு மிரட்டல் கடிதம்

தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாஹூ அலுவலகத்தில் வெடி குண்டு மிரட்டல் கடிதம் வந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது.

தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாஹூ அலுவலகத்தில் வெடி குண்டு மிரட்டல் கடிதம் வந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது, 

தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகிக்கும் சத்ய பிரதா சாஹூ தலைமையில் தான் தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்றது. நேற்றுடன் தேர்தல் முடிவடைந்த நிலையில் வரும் இவரது அலுவலகத்துக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் சாஹூ அலுவலகத்தில் நிச்சயம் குண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் கடிதம் தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது.

bomb

இதையடுத்து மோப்ப நாய்களுடன் சாஹூ அலுவலகத்துக்கு வந்த காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கடிதம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் பழனிசாமி வீட்டுக்கும் குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது.