நிச்சயதார்த்தம் முடிந்ததா?… அதிர்ச்சியில் ஹர்திக் பாண்ட்யாவின் அப்பா

 

நிச்சயதார்த்தம் முடிந்ததா?… அதிர்ச்சியில் ஹர்திக் பாண்ட்யாவின் அப்பா

ஹர்திக் பாண்ட்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்று செய்தி வெளியான நிலையில் இது தனக்குத் தெரியாது என்று அவரது தந்தை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹர்திக் பாண்ட்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்று செய்தி வெளியான நிலையில் இது தனக்குத் தெரியாது என்று அவரது தந்தை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காயம் காரணமாக ஓய்விலிருந்துவந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் நடிகை நடாஷாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக அறிவிப்பு வௌியானது. இது குறித்து ஹர்திக் பாண்ட்யாவின் தந்தையிடம் கேட்டபோது, “நடாஷா நல்ல பெண். அவரை மும்பையில் பலமுறை சந்தித்துப் பேசியுள்ளேன். ஹர்திக் பாண்ட்யாவும் நடாஷாவும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காகத் துபாய் சென்றார்கள் என்பது தெரியும். ஆனால், அவர்கள் நிச்சயதார்த்தம் செய்துகொள்ள செல்கிறார்கள் என்பது தெரியாது. அதுபற்றி எந்த ஒரு விஷயத்தையும் அவர்கள் கூறவில்லை. இவர்களின் திடீர் நிச்சயதார்த்தம் எங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு, அது பற்றி அவர்கள் செய்தி வெளியிட்ட பிறகுதான் எங்களுக்கே தெரியும்” என்றார்.