நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு வெளிநாடு பறந்துள்ள ஆல்யா மானஸா – சஞ்சீவ் கார்த்திக் ஜோடி: காரணம் தெரியுமா?
‘ராஜா ராணி’ சீரியலுக்காக சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா ஜோடி தற்போது சிங்கப்பூருக்குப் பறந்துள்ளது.
‘ராஜா ராணி’ சீரியலுக்காக சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா ஜோடி தற்போது சிங்கப்பூருக்குப் பறந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானஸா – சஞ்சீவ் கார்த்திக் ஜோடி. வழக்கமாகக் கதைக்களமாக இருந்தாலும் இந்த ஜோடி பொதுமக்களால் இந்த ஜோடி கொண்டாடப்பட்டு வந்தது. சீரியலின் மூலம் ரீல் ஜோடியாக வலம்வந்த ஆல்யா – கார்த்திக் ஜோடி காதலிப்பதாக்கத் தகவல் வெளியானது. இதை இந்த ஜோடி உறுதி செய்தது.
இதையடுத்து சின்னதிரை நடிகர்களுக்கு விஜய் டெலிவிஷன் விருதை விஜய் தொலைக்காட்சி வழங்கி கௌரவித்தது. அதில் சிறந்த நடிகைக்கான விருதை நடிகை ஆல்யா மானஸா தட்டி சென்றார். அப்போது இந்த விழாவிலேயே ஆல்யா மானஸா – சஞ்சீவ் கார்த்திக் ஜோடிக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் ராஜா ராணி சீரியலுக்காக ஆல்யா மானஸா – சஞ்சீவ் கார்த்திக் ஜோடி சிங்கப்பூர் பறந்துள்ளனர். 500 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியலில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடைபெறுகிறதாம்.
வழக்கமாக வெள்ளித்திரை படங்களின் படப்பிடிப்பு தான் வெளிநாடுகளில் நடத்தப்படும். ஆனால் தற்போது சின்னதிரையும் வெளிநாடுகளை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்துள்ளது அதன் வளர்ச்சியையே காட்டுகிறது என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் வாசிக்க: பாலிவுட் செல்லும் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்!