நா முத்துசாமி மறைவு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

 

நா முத்துசாமி மறைவு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

கூத்துப்பட்டறை நிறுவனர் நா முத்துசாமி மரணத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை: கூத்துப்பட்டறை நிறுவனர் நா முத்துசாமி மரணத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புஞ்சை என்ற கிராமத்தில் பிறந்தவர் ந.முத்துசாமி. கலைத்துறையின் மீது கொண்ட காதலினால், ‘கூத்துப்பட்டறை’ என்ற நாடக அமைப்பை நிறுவினார்.

இன்றைக்கு பிரபல நடிகர்களாக அறியப்படும் விஜய் சேதுபதி, விஷால், பசுபதி போன்ற நடிகர்கள் இவரின் கூத்துப்பட்டறையில் தான் நடிப்பு பயின்றனர். 

சமீப காலமாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த ந.முத்துசாமி, சென்னையில் இன்று காலமானார். 

அவரின் மறைவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “நாடக கலைக்கு நவீன முகம் கொடுத்த கூத்துப்பட்டறை ந.முத்துசாமி மறைவெய்தியது வருத்தமளிக்கிறது. இவரது மறைவு தமிழ் கலை இலக்கிய உலகிற்கு பேரிழப்பு.

அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவர் உருவாக்கிய கலைஞர்கள் அவரது கனவை முன்னெடுத்துச் செல்வார்கள் என நம்புகிறேன்!” என இரங்கல் தெரிவித்துள்ளார்.