நாளை 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்துக்கு எதிராக ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி?

 

நாளை 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்துக்கு எதிராக ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி?

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது.

மாவோ: இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரின் ஐந்து போட்டிகளையும் வென்று நியூசிலாந்து அணியை இந்தியா துவம்சம் செய்து தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. ஹாமில்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை தன்வசமாக்கி உள்ளது. இதையடுத்து நடந்த 2-வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது.

ttn

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது. நியூசிலாந்து அணி ஏற்கனவே தொடரைக் கைப்பற்றி விட்டதால் ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. நியூசிலாந்தின் மாவோ பகுதியில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இப்போட்டி இந்திய நேரப்படி காலை 07:30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.