நாளை 2-வது ஒருநாள் போட்டி – பிளாக் கேப்ஸை வீழ்த்தி பதிலடி கொடுக்குமா இந்திய அணி?

 

நாளை 2-வது ஒருநாள் போட்டி – பிளாக் கேப்ஸை வீழ்த்தி பதிலடி கொடுக்குமா இந்திய அணி?

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை ஆக்லாந்தில் நடைபெற உள்ளது.

ஆக்லாந்து: இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை ஆக்லாந்தில் நடைபெற உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரின் ஐந்து போட்டிகளையும் வென்று நியூசிலாந்து அணியை இந்தியா துவம்சம் செய்து தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. ஹாமில்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை தன்வசமாக்கி உள்ளது. இந்த நிலையில், நாளை இவ்விரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்து ஈடன்பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.

TTN

இந்தப் போட்டியில் தோற்றால் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி விடும். அதனால் விட்டுக் கொடுக்காமல் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி காலை 7:30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், “அடுத்த போட்டியில் மிகப்பெரிய அளவில் வலுவாக திரும்புவோம். கடந்த காலங்களில் இதுபோன்று செய்திருக்கிறோம்” என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.