நாளை தொடங்குகிறது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு!
நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதால், மாணவர்கள் எல்லாரும் தேர்வுகளுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரையிலும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி வரையிலும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது. நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதால், மாணவர்கள் எல்லாரும் தேர்வுகளுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். மொத்தமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7,276 பள்ளிகளிலிருந்து 8,16,359 மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். பள்ளிகள் அல்லது கல்வி மையங்களின் மூலமாக 19,166 தனித் தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 வரை தேர்வு நடக்க உள்ளது. தேர்வெழுதும் மாணவர்களைக் கண்காணிக்க 42,000 ஆசிரியர்களும் 4,000 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன.