நாளை சென்னை மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது !

 

நாளை சென்னை மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது !

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகச் சென்னையில் நாளை திமுக தலைமையில் பேரணி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அனைத்து தோழமை கட்சிகளுக்கும், மாணவர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகச் சென்னையில் நாளை திமுக தலைமையில் பேரணி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அனைத்து தோழமை கட்சிகளுக்கும், மாணவர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது. நாளை ஆயிரக்கணக்கானோர் அந்த பேரணியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து சென்னை மாநகர  போக்குவரத்துக் கழகம் அனைத்து ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளது. 

tt

அதில், மாநகர போக்குவரத்துக்குக் கழகம் மக்களுக்கு மிக முக்கியமான போக்குவரத்து சேவையை நடத்தும் முக்கியமான நிறுவனம். அதனால் தொழிலாளர்கள் அனைவரும் நாளை வழக்கம் போல பணிக்குத் தவறாமல் வர வேண்டும் என்றும் வழக்கமாக நாளை விடுமுறை எடுக்கும் ஊழியர்கள் மற்றொரு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு நாளை கட்டாயம் பணிக்கு ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி சார்பில் நாளை போராட்டம் நடக்கவுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.