நாளை இந்த ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் !

 

நாளை இந்த ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் !

தமிழக துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கடந்த 14 ஆம் தேதி 2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை 10 ஆவது முறையாகத் தாக்கல் செய்தார்.

தமிழக துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கடந்த 14 ஆம் தேதி 2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை 10 ஆவது முறையாகத் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மற்றும் அறிவிப்புகளைத் தெரிவித்தார். 

ttn

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, சபாநாயகர்  சட்டப்பேரவை வரும் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று சபாநாயர் தனபால் தெரிவித்தார். அதனையடுத்து, பட்ஜெட் தொடர்பான கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் படி, நாளை இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.