நாளை ஆக்லாந்தில் 2-வது டி20 போட்டி – இந்தியாவுக்கு பதிலடி கொடுக்குமா நியூசிலாந்து?

 

நாளை ஆக்லாந்தில் 2-வது டி20 போட்டி – இந்தியாவுக்கு பதிலடி கொடுக்குமா நியூசிலாந்து?

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நாளை ஆக்லாந்தில் நடைபெற உள்ளது.

ஆக்லாந்து: இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நாளை ஆக்லாந்தில் நடைபெற உள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்திய தரப்பில் லோகேஷ் ராகுல் 56 ரன்களும், விராட் கோலி 45 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 58 ரன்களும் எடுத்து இந்த வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர். குறிப்பாக இறுதி ஓவர்களில் ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடி ஆட்டம் தான் இந்தியாவை வெற்றிப்பாதைக்கு கொண்டு போனது.

இந்நிலையில், இவ்விரு அணிகளும் மோதும் 2-வது டி20 போட்டி நாளை அதே ஆக்லாந்து ஈடன்பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 12.20 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. மேலும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. முதல் போட்டியில் ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இரண்டாவது போட்டியில் இவ்விருவரில் யாராவது ஒருத்தருக்கு கோலி வாய்ப்பளிப்பார் என்று நம்பப்படுகிறது.