நாளை அதிமுக வின் எம்.எல்.ஏ கூட்டம் நடைபெறும்: தலைமை கழகம்!

 

நாளை அதிமுக வின் எம்.எல்.ஏ கூட்டம் நடைபெறும்: தலைமை கழகம்!

நாளை தலைமை கழகத்தில் மாலை 4 மணிக்கு அதிமுக வின் எம்.எல்.ஏ கூட்டம் நடைபெறும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது. மேலும், அக்கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடை தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனையடுத்து இன்று மாலை 3 மணி வரை தேர்தலில் போட்டியிட விருப்பப் படுவோர் விருப்ப மனுவை அளிக்கலாம் என அறிவுறுத்தப் பட்டது. 

AIADMK

இன்று மாலை, விருப்ப மனு அளிப்பது முடிந்த பின்னர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தோரை நேர்காணல் நடத்தவிருக்கின்றனர். 

AIADMK

தி.மு.க தலைமையில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸும் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க வும் போட்டியிட போவதாக அறிவிக்கப் பட்டதையடுத்து, அ.தி.மு.க வினர் தேர்தலில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றனர். அதனால், நாளை தலைமை கழகத்தில் மாலை 4 மணிக்கு அதிமுக வின் எம்.எல்.ஏ கூட்டம் நடைபெறும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது. மேலும், அக்கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.