நாலு படம் ஓடிட்டா போதும் உடனே முதல்வராகிடனும்: அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

 

நாலு படம் ஓடிட்டா போதும் உடனே முதல்வராகிடனும்: அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

அதிமுக மட்டும் தான் அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றுகிறது.

மதுரை : இன்றைய நடிகர்கள் நான்கு  படங்கள் ஓடிவிட்டால் முதல்வராகி விடலாம் எனத் தப்புக் கணக்குப் போடுகிறார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

sellur raju

மதுரை பெத்தானியாபுரத்தில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.  கலந்துகொண்டு பேசிய  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, புற்றீசல் போல நடிகர்கள் கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடிக்க ஆசைப்படுகிறார்கள். நான்கு படங்கள் ஓடிவிட்டால் போதும்  உடனே முதல்வராகி விடலாம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள்’ என்றார். 

sellur raju

தொடர்ந்து பேசிய அவர்,  அதிமுக மட்டும் தான் அண்ணாவின் கொள்கைகளைப் பின்பற்றுகிறது. அமித்ஷாவின் ஒரே நாடு ஒரே மொழி அறிவிப்பானது  இந்தி பேசும் மக்களைக் கவரும் வகையில் தான் உள்ளது.அதனால் அவர்களுக்காகத் தான் அமித் ஷா அந்த கருத்தைப் பதிவிட்டார்’ என்று தெரிவித்தார்.