நாய் சிறுநீர் கழித்ததால் பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கிய கொடூரம்!

 

நாய் சிறுநீர் கழித்ததால் பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கிய கொடூரம்!

சென்னை நங்கநல்லூரில் வீட்டின் முன்பு நாய் சிறுநீர் கழித்ததால் ஆத்திரமடைந்த நபர், நாயை அழைத்துவந்த பெண்ணை கொடூரமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: சென்னை நங்கநல்லூரில் வீட்டின் முன்பு நாய் சிறுநீர் கழித்ததால் ஆத்திரமடைந்த நபர், நாயை அழைத்துவந்த பெண்ணை கொடூரமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நங்கநல்லூர் அம்பேத்கர் நகர் அருகே சுகுணா என்ற பெண் நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். அப்போது சக்தி என்பவரது வீட்டின் முன்பு நாய் சிறுநீர் கழித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சக்தி இரும்பு கம்பியைக் கொண்டு, சுகுணாவின் தலையில் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து படுகாயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான சக்தியை போலீசார் தேடிவருவது  குறிப்பிடத்தக்கது.