நாய் குறுக்கே வந்ததால் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த காவலர் !

 

நாய் குறுக்கே வந்ததால் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த காவலர் !

இவர் நேற்று முத்துராமலிங்க புரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்திருக்கிறார்.

விருதுநகர் மாவட்டம், எம்.ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் தனிப்படை காவலராக பணிபுரிந்து வருபவர் சாம்பிரேம் ஆனந்த். இவர் நேற்று முத்துராமலிங்க புரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்திருக்கிறார். தலையில் ஹெல்மெட் அணிந்து, அதில் இருக்கும் “சின் ஸ்ட்ராப்”  என்ற பாதுகாப்பு பட்டையை அணியாமல் சென்றுள்ளார். அவர் செல்லும் வழியில், நாய் ஒன்று குறுக்கே வந்ததால் காவலர் நிலை தடுமாறி கீழே வாகனத்தில் இருந்து விழுந்துள்ளார். 

police

கீழே விழுந்த வேகத்தில், அவரது தலை சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் பலமாக மோதியுள்ளது. அதனைக் கண்ட பொதுமக்கள் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்துள்ளனர்.

dead

ஆனால், பேரிகார்டில் வேகமாக மோதியதால் காவலருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே காவலர் உயிரிழந்துள்ளார். அவர் ஹெல்மெட் முறையாக அணிந்திருந்தால், பேரிகார்டில் மோதியிருந்தால் கூட தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்காது. ஹெல்மெட் முறையாக அணியாததே இந்த விபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.