நாய்க்காக பக்கத்து வீட்டு நபரை கோடாரியால் தாக்கி கொலை செய்த கொடூரம்!..

 

நாய்க்காக பக்கத்து வீட்டு நபரை கோடாரியால் தாக்கி கொலை செய்த கொடூரம்!..

காசிபூர், பேப்பர் மார்கெட் பகுதியில் வசித்து வந்தவர் மஹஜன். இவர் ஒரு கூலித் தொழிலாளி, மஹஜனின் மனைவி கிருஷ்ணாவதி காவல்துறையில் ஒரு புகார் அளித்துள்ளார்.

புதுடெல்லி: தன் செல்ல நாயை அடித்ததாக கூறி பக்கத்து வீட்டு நபரை ஒருவர் கோடாரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை

காசிபூர், பேப்பர் மார்கெட் பகுதியில் வசித்து வந்தவர் மஹஜன். இவர் ஒரு கூலித் தொழிலாளி, மஹஜனின் மனைவி கிருஷ்ணாவதி காவல்துறையில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அதில்,  கடந்த சனிக்கிழமை அன்று என்னையும் என் கணவரையும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பிபாய் லால் தனது நாயை தாக்கியதாக கூறி வசை பாடினார். வாக்குவாதம் முற்றியதில், பிபாய் லாலின் மகன் சுரேஷ் என் கணவரை கோடாரியால் தாக்கினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

லால்

கோடாரியால் தாக்கப்பட்ட மஹஜனை, லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கிருந்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக  குரு தேஜ் பகதூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்களில் மஹஜன் உயிர் பிரிந்தது என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

CzvfZv

இதுதொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை செய்ய பயன்படுத்திய கோடாரியை மீட்டு, சுரேஷை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்க: அதிமுக விஞ்ஞானி தெர்மகோல் ராஜூ; கலாய் ட்வீட்டின் மூலம் பதிலடி தந்த குஷ்பூ