‘நாய்கள் குரைப்பதற்காக கார்கள் நிற்பதில்லை’ : சேரனுக்கு அட்வைஸ் செய்த நடிகர் விவேக்
கவின் – லாஸ்லியா ரசிகர்கள் அவர்கள் காதலுக்கு எதிரி சேரன் தான் என்ற ரீதியிலே அவரை வசைபாடி வந்தனர்.
இணையத்தில் வரும் எதிர்மறை கருத்துக்கள் குறித்து இயக்குநர் சேரனுக்கு நடிகர் விவேக் அட்வைஸ் செய்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஹைலைட் என்றால் அது கவின் – லாஸ்லியா காதல் தான். இவர்கள் காதல்
நிகழ்ச்சியில் மட்டுமில்லாது வெளியிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கவின் – லாஸ்லியா இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் ஒன்று கூட வெளியாகவில்லை.இதனால் ஆத்திரமடைந்த கவின் – லாஸ்லியா ரசிகர்கள் அவர்கள் காதலுக்கு எதிரி சேரன் தான் என்ற ரீதியிலே அவரை வசைபாடி வந்தனர்.
இதனால் கடுப்பான சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே.. சோஷியல் நெட்வொர்க் என்ற பெயரில் அத்துமீறி ஆபாச வார்த்தைகளால் விமர்சனம் செய்யும் நிலை வளர்ந்துவிட்டது..சிலரின் மனதில் காட்டுப்பேயாய் குடியேறியிருக்கும் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்..#CheranFansAgainstCyberBullying’ என்று பதிவிட்டிருந்தார். மேலும் லாஸ்லியா கவின் பெயரை கூட இனி நான் சொல்ல மாட்டேன் என்று கூறியிருந்தார்.
ஆமாம் சார்.. அதைத்தான் நாங்களும் சொல்ல முயல்கிறோம். நாங்கள் யாருக்கும் பதிலுக்கு பதில் பேச சொல்லல..
அதச்செய்யாதீங்கன்னு சொல்றோம்..
மரம் இல்லைன்னு நிறையபேர் சொன்னாங்க… நீங்க மரக்கன்று நட்டிங்களே… அது போல சார்…. https://t.co/no6TynG1KY— Cheran (@directorcheran) October 22, 2019
இந்நிலையில் சேரனின் இதுபோன்ற பதிவுகளுக்குப் பதிலளித்துள்ள நடிகர் விவேக், ‘சேரன் சார்! உயர்ந்த நேர்மறைகளை பதிவிட்டு, எதிர்மறைகளை அலட்சியப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். நாய்கள் குரைப்பதற்காக கார்கள் நிற்பதில்லை! ‘ என்றும் ‘ஒரு ஆபாசத்துக்கு இன்னொரு ஆபாசம் பதில் என்றால் சமூகமே அழுகி,நாற்றம் அடிக்கும் குப்பைமேடு ஆகிவிடும். அமைதியாக அதை கடந்து சென்றால், அது மக்கி மண்ணாகி விடும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.