நாயை கட்டிப்பிடித்து செல்பி… கடைசியில் இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்!
அங்கு அவருக்கு சுமார் இரண்டு மணிநேரம் அறுவை சிகிச்சையின் மூலம் முகத்தில் 40 தையல்கள் போடப்பட்டுள்ளது.
அர்ஜென்டினாவில் நாயுடன் போட்டோ எடுக்க முயன்ற பெண்ணை அந்த நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினா அருகே உள்ள டுகுமனைச் சேர்ந்தவர் லாரா ஜான்சன். 17 வயதான இந்த பெண் தனது நண்பர் ஒருவரின் நாயுடன் போட்டோ எடுக்க ஆசைப்பட்டுள்ளார். கென்னை என்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாயினை கட்டியணைத்து புகைப்படம் எடுக்க முற்பட்ட போது, கடுப்பான அந்த நாய் லாராவின் முகத்தை கடித்து குதறியுள்ளது.
இதனால் படுகாயம் அடைந்த லாரா அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சுமார் இரண்டு மணிநேரம் அறுவை சிகிச்சையின் மூலம் முகத்தில் 40 தையல்கள் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறியுள்ள லாரா, என்மீது தான் தவறு, கென்னை எதுவும் செய்ய வேண்டாம் என கேட்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.