நாயை அடித்து கால்வாயில் போட்டு கொலை செய்த கொடூரன்: தேடும் போலீசார்!?

 

நாயை அடித்து  கால்வாயில் போட்டு கொலை செய்த கொடூரன்: தேடும் போலீசார்!?

நாயை ஒருவர் அடித்து காலை கட்டி கழிவுநீர் கால்வாயில் போட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வண்ணார பேட்டை: நாயை ஒருவர் அடித்து காலை கட்டி கழிவுநீர் கால்வாயில் போட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை வண்ணார பேட்டையில் உள்ள மூலகொத்தலம் பகுதியில் கடந்த 11ஆம் தேதி  ஒருவர் நாய் ஒன்றை அடித்து அதன் கால்களைக் கட்டி சாலையில் இழுத்துச் சென்றுள்ளார். இதையடுத்து அந்த நாயை அப்பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் வீசினார்.  கால்கள் கட்டப்பட்ட நிலையிலிருந்த நாய் தப்பிக்க வழியின்றி துடிதுடித்து இறந்து போனது. இந்த கொடூர சம்பவம்  சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப்பில்  வீடியோவாக வெளியானது. 

dog

இந்நிலையில் இந்த மனிதமற்ற செயலை கண்டித்து  விலங்குகள் நல ஆர்வலர் மகாதேவன் என்பவர் வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து  மிருக வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் புகைப்படத்திலிருந்த நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

crime

கருணையின்றி நாய்  மீது மூர்க்க தனமாகத் தாக்குதல் நடத்தி கொலை செய்த நபருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.