நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஷாகுல்ஹமீது கொரோனாவால் மரணம்

 

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஷாகுல்ஹமீது கொரோனாவால் மரணம்

2009-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை பலரும் அதில் இருந்து வெளியேறி உள்ளனர். பலரும் இணைந்து இருக்கின்றனர். கடந்த வாரத்தில் கட்சியில் ஏற்பட்ட சிறு பிரச்னையின் காரணமாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜிவ்காந்தி கட்சியிலிருந்து விலகினார். அடுத்து நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரமும் கட்சியிலிருந்து விலகினார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஷாகுல்ஹமீது கொரோனாவால் மரணம்

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஷாகுல்ஹமீது கொரோனாவால் உயிரிழந்துள்ளார். நடந்து முடிந்த இடைத்தேர்தலில் திருவாரூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஷாகுல்ஹமீது , 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் தேசியப் போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறை சென்றிருக்கிறார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள அந்தனப்பேட்டை எனும் சிற்றூரில் பிறந்தவர் ஷாகுல்ஹமீதுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து வேளச்சேரி காமாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.