நாம் இருவர் ! நமக்கு இருவர் ! கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு அரசு வேலை இல்லை !

 

நாம் இருவர் ! நமக்கு இருவர் ! கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கு அரசு வேலை இல்லை !

2 குழந்தைகள் மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடையாது என்ற அதிரடி அறிவிப்பை அசாம் அரசு வெளியிட்டுள்ளது.

2 குழந்தைகள் மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலை கிடையாது என்ற அதிரடி அறிவிப்பை அசாம் அரசு வெளியிட்டுள்ளது.

அசாமில் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகளில் ஒன்று 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல்,  2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசாங்க வேலை இல்லைஎன்ற அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுமட்டுமின்றி நிலமற்ற பூர்வகுடி மக்களுக்கு விவசாய நிலங்கள் மற்றும் வீடு கட்டுவதற்கான நிலங்களை வழங்கவும் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது. நிலமற்ற ஏழைமக்களுக்கு வீடு கட்ட நிலம் வழங்கவும் ஆனால் அந்த வீட்டை அவர்கள் 15 ஆண்டுகளுக்கு விற்க முடியாது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

assam

`அசாமின் மக்கள்தொகை மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் கொள்கை’ 2017ல் அசாம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 2 குழந்தைகள் இருப்பவர்கள் மட்டுமே அரசாங்கப் பணிக்கு தகுதியுடையவர்கள் என்றும் தற்போது அரசு வேலைகளில் இருக்கும் ஊழியர்கள் இந்த விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து கழகத்தை மீட்டெடுக்க அரசுப் போக்குவரத்தக் கழக பேருந்து கட்டணத்தை 25 சதவிகிதம் உயர்த்தவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.