நான் வெயிட் பண்ணேன்…ஆனா திருமா எதுவும் சொல்லல: டிவிட்டர் போய் பேஸ்புக் வந்தது டும்! டும்! டும் !

 

நான் வெயிட் பண்ணேன்…ஆனா திருமா எதுவும் சொல்லல: டிவிட்டர் போய் பேஸ்புக் வந்தது டும்! டும்! டும் !

உண்மையான தலைவர் அனைவரையும் சமமாகப் பார்ப்பார். நீங்கள் உங்கள் வழக்கமான வேலையைப் பாருங்கள்

நடிகை காயத்ரி ரகுராம் திருமாவளவனுக்கு எதிராக தொடர்ந்து கருத்து கூறி வந்தார். அதாவது இந்துக்களுக்கு எதிராக பேசி வரும் திருமாவளவனை எங்கு பார்த்தாலும், இந்துக்கள் செருப்பால் அடியுங்கள் என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.மதவெறியைத் தூண்டும் வகையில் காயத்ரி ரகுராம் பேசியிருப்பதாகப் பலரும் கருத்து கூறி வந்தனர். இதையடுத்து விசிகவினர்  போராட்டம் நடத்தினர். இதையடுத்து காயத்ரியின் டிவிட்டர் கணக்கு  முடக்கப்பட்டது. 

ttn

முன்னதாக காயத்ரி ரகுராம், நவம்பர் 27 ஆம் தேதி மெரினாவில் நான் உங்களை தனி ஆளாக சந்திக்கிறேன். விசிகவினர்  என்ன செய்துவிடுவார்கள். இந்துக்கள் குறித்து என்னுடன் பேசுவதற்குத் தயாரா  திருமா’ என்று கூறியிருந்தார்.  

 

இந்நிலையில் காயத்ரி ரகுராம் தனது பேஸ்புக் பக்கத்தில், இன்று திருமாவளவனுடன் ஆலோசனை நடத்த அவரின் ஒப்புதலுக்காகக் காத்திருந்தேன். ஆனால்  இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. விசிக தொண்டர்களை நான் ஏமாற்றும்படி ஆகிவிட்டது. உங்கள் அனைவருக்கும் எனது அன்பை உரித்தாக்குகிறேன். இனிவரும் காலங்களில்  எந்தவொரு  எம்.பி.க்கும், தலைவருக்கும் சாதி, மத அடிப்படையில் பாகுபாடு பார்க்காதீர்கள். ஒரு உண்மையான தலைவர் அனைவரையும் சமமாகப் பார்ப்பார். நீங்கள் உங்கள் வழக்கமான வேலையைப் பாருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.