நான் மைக் குமார் இல்லை, மைக் டைசன் குமார் : டிடிவி தினகரனுக்கு பதிலடி கொடுத்த ஜெயக்குமார்

 

நான் மைக் குமார் இல்லை, மைக் டைசன் குமார் : டிடிவி  தினகரனுக்கு பதிலடி கொடுத்த ஜெயக்குமார்

Me too, we too விவகாரத்தில் எல்லாருமே ஏமாற்றுபவர்கள் தான் என்று  தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். 

சென்னை: Me too, we too விவகாரத்தில் எல்லாருமே ஏமாற்றுபவர்கள் தான் என்று  தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ‘அதிமுக எனும் எஃகு கோட்டையை தகர்க்க நினைக்கிறவர்களின் தலைகள் தான் சுக்கு நூறாகும். திமுக தலைவர் ஸ்டாலினின் முதல்வர் கனவு, அவரைத் தூங்க விடாத காரணத்தால் தான், அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

மைக் முன்னாடி தாம் பேசுவதை டிடிவி தினகரன், மைக் குமார் என விமர்சிப்பதற்குப் பதிலடியாக தான் மைக் டைசன் என்று பதிலளித்துள்ளார். Me too விவகாரத்தைப் போன்று ஆண்களும் we too எனப் பதிவிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், இந்த விவகாரத்தில் எல்லாருமே you too brutus தான் என்று கருத்து கூறியுள்ளார்.