நான் மற்ற அமைச்சர்கள் போல பந்தா கிடையாது… அமைச்சர் பாஸ்கரன் பேச்சு

 

நான் மற்ற அமைச்சர்கள் போல பந்தா கிடையாது… அமைச்சர் பாஸ்கரன் பேச்சு

பா.ஜ.க-வை கழற்றிவிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று பேட்டி அளித்து சர்ச்சையில் சிக்கியவர் அமைச்சர் பாஸ்கரன். தமிழகத்தில் இப்படி ஒருவர் அமைச்சராக இருக்கிறாரா என்பது அப்போதுதான் தெரியவந்தது. மேலும், ஜெயலலிதா நினைத்திருந்தால் எனக்கு நல்ல துறையை ஒதுக்கியிருக்கலாம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தமிழக கதர் துறை அமைச்சர் பாஸ்கரன் சமீபத்தில் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து பிரபலம் ஆக முயற்சித்து வருகிறார். அந்த வகையில் மற்ற அமைச்சர்களைப் போல நான் பந்தா இல்லை என்று அவர் பேசியிருப்பது அ.தி.மு.க-வில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க-வை கழற்றிவிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று பேட்டி அளித்து சர்ச்சையில் சிக்கியவர் அமைச்சர் பாஸ்கரன். தமிழகத்தில் இப்படி ஒருவர் அமைச்சராக இருக்கிறாரா என்பது அப்போதுதான் தெரியவந்தது. மேலும், ஜெயலலிதா நினைத்திருந்தால் எனக்கு நல்ல துறையை ஒதுக்கியிருக்கலாம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அமைச்சர் பாஸ்கரின் பேச்சால் பா.ஜ.க-வினர் கொந்தளித்தனர். இதைத் தொடர்ந்து பாஸ்கரனை அழைத்து எடப்பாடி பேசவே, தான் அவ்வாறு கூறவில்லை என்று பல்டி அடித்தார்.

minister-baskaran-89

தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு டஃப் கொடுக்கும் வகையில் அமைச்சர் பாஸ்கரன் பேட்டி அளித்து வருகிறார். தற்போது காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விழாவில் பாஸ்கரன் பங்கேற்றுப் பேசினார். அப்போது, “நான் சட்டசபைக்கு செல்லும்போது எளிமையாக சென்று வருவேன். யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்பேன். மற்ற அமைச்சர்கள் கூட்டு சேர்ந்துகொண்டு பந்தா காட்டுகின்றனர். நான் அவர்கள் மத்தியில் பந்தா காட்டுவது இல்லை. பெரிய மீசை வைத்திருப்பதால் எல்லோரும் என்னை ஆசையாக சிங்கம் என்றுதான் அழைப்பார்கள். நான் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பதால் தி.மு.க எம்.எல்.ஏ மகேஷ் கூட என்னை சட்டமன்றத்தில் புகழ்ந்து பேசினார். 

basakran-09

இன்றைக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால் தவறான வழியில் செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. நிறைய இளைஞர்கள் செல்போனை கையில் வைத்துக்கொண்டு பைத்தியம் போல் பேசித் திரிகின்றனர். பெண்கள் படித்துவிட்டு எப்போது திருமணம் செய்வார்கள் என்று காத்திருக்காமல் வேலைக்கு செல்ல வேண்டும்” என்றார். மற்ற அமைச்சர்கள் எல்லாம் பந்தா காட்டுகிறார்கள் என்று அமைச்சர் பாஸ்கரன் கூறியிருப்பது கட்சிக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.