நான் பிரதமராக தயார்: ராகுல் காந்தி அதிரடி

 

நான் பிரதமராக தயார்: ராகுல் காந்தி அதிரடி

கூட்டணி கட்சிகள் விருப்பப்பட்டால் நான் பிரதமராக தயார் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

டெல்லி: கூட்டணி கட்சிகள் விருப்பப்பட்டால் நான் பிரதமராக தயார் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. அதில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகளும், ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என பாஜகவும் எண்ணி இப்போதிலிருந்தே செயல்பட்டு கொண்டிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக களமிறக்கலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் ஏற்பாடு செய்த தலைவர்கள் சந்திப்பு எனும் நிகழ்ச்சி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். அதில் இரண்டு செயல்முறைகள் உள்ளன. முதலாவது, மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு பாஜகவை வீழ்த்த வேண்டும். இரண்டாவது, தேர்தல் முடிந்த பிறகு அனைவரும் கலந்தாலோசித்து பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். ஒருவேளை கூட்டணி கட்சிகள் விருப்பப்பட்டால் நான் பிரதமர் ஆக தயார் என்றார்.