நான் பள்ளியில் படிக்கும்போதே ஒருவரை காதலித்தேன்! அதன்பின் இருவரும் பேசி பிரிந்துவிட்டோம் – பிரியா வாரியர் ஓபன் டாக்!

 

நான் பள்ளியில் படிக்கும்போதே ஒருவரை காதலித்தேன்! அதன்பின் இருவரும் பேசி பிரிந்துவிட்டோம் – பிரியா வாரியர் ஓபன் டாக்!

மலையாளத்தில் ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தில் வரும் ‘மாணிக்க மலராய பூவி’ பாடலில் தனது புருவ அசைவுகளால் சமூக வலைத்தளத்தில் ஒரே நைட்டில் வைரலானவர் பிரியா பிரகாஷ் வாரியர். இவரது புருவ அசைவுகள் பாலிவுட் வரை பிரபலமானதையடுத்து, தேசிய அளவில் பிரபலமானார். மேலும் கடந்த வருடம் அதிகம் இணையத்தில் தேடப்பட்ட நபர் என்ற லிஸ்ட்டிலும் பிரியா வாரியர் இடம்பிடித்திருந்தார். 

இதையடுத்து மலையாள இயக்குநர் பிரசாந்த் மாம்பூலி இயக்கிய ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடித்துள்ளார்.  ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் பிரியா வாரியர் கிளாமராகவும், மது, சிகெரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. 

priya prakash varrier

இந்நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நான் பள்ளியில் 9 ஆவது படிக்கும்போதே என்னுடன் படிக்கும் ஒரு பையனை காதலித்தேன். ஒரு பையன் வந்து என்னிடம் காதலை சொன்னான். அவனுடைய காதலை ஏற்று நானும் அவனை காதலித்தேன். அது ஒரு இன ஈர்ப்பு என்பதை பின்னர் இருவருமே புரிந்து கொண்டோம். அதன்பிறகு இரண்டு பேரும் பேசி பிரிந்து விட்டோம்.தற்போது படிப்பிலும், நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன்” என பிரியா வாரியர் மனம் திறந்துள்ளார்.