‘நான் பச்சை பச்சையா கேட்பேன்’ : மீராவை உசுப்பேற்றிய கவின்; சந்திரமுகி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்த மீரா!

 

‘நான் பச்சை பச்சையா கேட்பேன்’ : மீராவை உசுப்பேற்றிய கவின்; சந்திரமுகி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்த மீரா!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்று வாரங்களைக்  கடந்துள்ளது. சண்டைக்கும் சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாத  பிக் பாஸ் வீடு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது

பிக் பாஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து,  கவினிடம் வனிதாவுக்கு மேல பேசுவேன்.. கடுப்பான பச்சை பச்சையாகப் பேசுவேன் என்று மீரா கூறியுள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்று வாரங்களைக்  கடந்துள்ளது. சண்டைக்கும் சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாத  பிக் பாஸ் வீடு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. நேற்றைய போட்டியிலிருந்து யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக வனிதா வெளியேறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 

vanitha

இதையடுத்து வனிதா வெளியேறிய சோகத்தில் சிலர் அழுதுகொண்டிருக்க, மீரா, சரணவன், கவின் மற்றும் சாண்டி ஆகியோர் கார்டன் ஏரியாவில் பேசி கொண்டிருக்கின்றனர். அப்போது கவின் டஃப்பான 
ஒரு போட்டியாளரையே இப்படி அசால்ட்டா தூக்கிட்டாங்களே. இனிமே வீட்டில சண்டை போட ஆளே இல்லையே என்று கூறினார். அதற்கு உடனே மீரா, கவலைப்படாதீங்க. அதான் நான் இருக்கிறேனே. வனிதாவுக்கு மேல பேசுவேன்.. கடுப்பான பச்சை பச்சையாக பேசுவேன்’ என்று ஆவேசப்படுகிறார். 

meera

மறுபடியும் கவின், நீ 10 பாயிண்ட் பேசினா அங்கிருந்து பேசுவ. ஆனால் வனிதா அக்கா அப்படி போய் பாத்திருக்கியா? மத்தவங்கள தான் ஓட விடுவாங்க அவுங்க ஓட மாட்டாங்க  என்று உசுப்பேற்றினார். மறுபடியும் மீரா, என்ன பத்தி சரியா தெரியல, கோபம் வந்தா அசிங்க அசிங்கமா கேட்பேன் என்று கூறு விட்டு அங்கிருந்து சென்றார். அப்போது கவின், ஏதோ நம்மலால முடிஞ்சது. இதை லைட்டா கொளுத்துவிட்ட போதும் போலயே காட்டையே எரிச்சுடும்’ என்று கூறி சிரிக்கிறார். இதைப் பார்க்கும் போது இனிவரும் வாரங்களில் போது மீரா தன்னை சந்திரமுகி ரேஞ்சுக்கு பில்டப் பண்ணவும் வாய்ப்புள்ளது போலவே தோன்றுகிறது.