நான் தான் தீபாவின் பாதுகாப்பு அரண் : ஜெ.தீபாவின் டிரைவர் ராஜா பரபரப்பு புகார்!

 

நான் தான் தீபாவின் பாதுகாப்பு அரண் : ஜெ.தீபாவின் டிரைவர் ராஜா பரபரப்பு புகார்!

நான்  தான் தீபாவிற்கு பாதுகாப்பு அரணே, அதனால் எங்களை சேர்த்து வையுங்கள் தீபாவின் டிரைவர் ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை: நான்  தான் தீபாவிற்கு பாதுகாப்பு அரணே, அதனால் எங்களை சேர்த்து வையுங்கள் தீபாவின் டிரைவர் ராஜா தெரிவித்துள்ளார்.

ஜெ. தீபாவின் கார் ஓட்டுனர் ராஜா  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் ஒன்று அளித்துள்ளார், அதில், “எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் மாநில செயலாளராக இருந்து வரும் நான் தீபாவின் குடும்ப நண்பர் என்ற முறையில் அவருக்கு பாதுகாப்பாக இருந்து வருகிறேன். கட்சியில் கிளை பதவி முதல் மாவட்ட செயலாளர்கள் பதவிகள் உட்பட அனைத்திற்கும் கடுமையான போட்டி நிலவி வந்தது. கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்த குறிப்பிட்ட சிலர் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் தூண்டுதலில் தீபாவுக்கு எதிராக செயல்பட்டு வந்தனர். அதன் காரணமாக அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இதன் காரணமாக தீபாவின் கணவரும் கட்சியில் உள்ள சிலரும் என் மீது கோபம் அடைந்தனர். அதன் விளைவாக சமூக வலைதளத்தில் என்னைப்பற்றி தவறான கருத்துகளை பதிவிட்டதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். பேரவை மற்றும் கழகத்தின் எந்த பணிகளையும் செய்ய விடாமல் தடுத்தனர். மேலும் தீபாவிற்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால் எனக்கு பாதுகாப்பு வழங்கவும், தீபாவிற்கு பாதுகாப்பு அறனாக செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் டிரைவர் ராஜா குறிப்பிட்டிருந்தார்.