நான் தற்கொலை செய்து கொண்டால்…விஜய் டி.விதான் பொறுப்பு… கொதிக்கும் மதுமிதா..!?
“பிக் பாஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இடையில் வெளியேறிய நடிகை மதுமிதா தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுவதாக போலீசில் விஜய் டிவி நிர்வாகம் புகார் கொடுத்துள்ளது.
சென்னை கிண்டி திருவிக தொழிற்பேட்டையில் ஏசியென்நெட் ஸ்டார் கம்யூனிகேசன்ஸ் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனுடைய சட்டப்பிரிவு மேலாளராக இருப்பவர் பிரசாத்.
“பிக் பாஸ்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இடையில் வெளியேறிய நடிகை மதுமிதா தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுவதாக போலீசில் விஜய் டிவி நிர்வாகம் புகார் கொடுத்துள்ளது.
சென்னை கிண்டி திருவிக தொழிற்பேட்டையில் ஏசியென்நெட் ஸ்டார் கம்யூனிகேசன்ஸ் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனுடைய சட்டப்பிரிவு மேலாளராக இருப்பவர் பிரசாத்.
இவர் கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், “விஜய் டிவியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் -3 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட. நடிகை மதுமிதா தன்னை காயப்படுத்தி கொண்ட காரணத்தினால் 50 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவர் செல்லும் போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா, ஏற்கனவே 11 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளார். மீதமுள்ள ஒரு நாள் 80,000 ரூபாய் வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தோம்.
அதை ஒப்புக் கொண்டு சென்றார். பிறகு கடந்த 19ம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு தொலைபேசி வாட்ஸ் அப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக நடிகை மதுமிதா மிரட்டல் விடுத்துள்ளார். பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் “தற்கொலை செய்து விடுவேன்” என்று மிரட்டி உள்ளார்” என்று புகாரில் கூறியுள்ளார்.
புகாரை பெற்றுக் கொண்டு கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.