நான் சாதாரண விவசாயி; தொழிலதிபர் இல்லை: எடப்பாடி பழனிசாமி பேச்சு!

 

நான் சாதாரண விவசாயி; தொழிலதிபர் இல்லை: எடப்பாடி பழனிசாமி  பேச்சு!

பல்வேறு தொழிலதிபர்களைச் சந்தித்து முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு செல்வதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை: பல்வேறு தொழிலதிபர்களைச் சந்தித்து முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு செல்வதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

முதல்வர் பழனிசாமி வெளிநாட்டுப் பயணமாக  லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு இன்றுமுதல் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காகச் சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

edappadi

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  பல்வேறு தொழிலதிபர்களைச் சந்தித்து முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு செல்கிறேன். நான் தொழிலதிபர் இல்லை. சாதாரண விவசாயி. நேரில் சென்று அழைத்தால் தான் முதலீடு செய்யப் பலரும் தமிழகத்திற்கு வருவார்கள்’ என்றார். 

முதற்கட்டமாக முதல்வர் பழனிசாமி  லண்டன் சர்வதேச மனித வள மேம்பாட்டு நிறுவனத்தினரைச் சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுகிறார்.பின்னர் நியூயார்க், துபாய் ஆகிய நாடுகளுக்குப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.