நான் கோயிலுக்கு செல்கிறேன்: மு.க.ஸ்டாலின்

 

நான் கோயிலுக்கு செல்கிறேன்: மு.க.ஸ்டாலின்

கிராமத்தில் மக்களை சந்திக்கும்போது நான் கோயிலுக்கு சென்ற உணர்வை பெறுகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருச்சி: கிராமத்தில் மக்களை சந்திக்கும்போது நான் கோயிலுக்கு சென்ற உணர்வை பெறுகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக ஊராட்சி சபை கூட்டங்கள் ஜனவரி 3-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் சட்டப் பேரவை கூட்டம் நடைபெற்றதால், தேதி மாற்றப்பட்டது. அதன்படி, “மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்” என்ற கொள்கை முழக்கங்களுடன் தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வருகிறார்.

அந்த வகையில், இன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருக்கும் சீகம்பட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர், கிராமங்களில் மக்களை காணும்போது நான் கோயிலுக்கு சென்ற உணர்வை பெறுகிறேன் என பேசினார்.