நான் கொடூரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவன்: இயக்குநர் செல்வராகவன் உருக்கம்!

 

நான் கொடூரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவன்: இயக்குநர் செல்வராகவன் உருக்கம்!

நான் கொடூரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவன் என்று இயக்குநர் செல்வராகவன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை: நான் கொடூரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவன் என்று இயக்குநர் செல்வராகவன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என தனது வித்தியாச படைப்புகளால் ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் செல்வராகவன். தற்போது என்.ஜி.கே படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். சூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி என 2 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சமீபகாலமாக சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இயக்குநர் செல்வராகவன், தனது டிவிட்டரில்உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘கொடுரமான வறுமையில் பிறந்து வளர்ந்தவன் நான்.இரு வேளை உண்டால்  அரிது.அண்டை வீட்டுக்காரர்களின் அன்பு காப்பாற்றியது. ஆயின் சமூகம் கேலி செய்யும்.நீ எல்லாம் என்ன சாதித்துக் கிழிக்கப் போகிறாய் என.எனக்கு தோள் கொடுத்து என் ரசிகர்கள் சாதித்தனர். அதனால்தான் அவர்கள் மட்டுமே என் நண்பர்கள்!’ என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக  இயக்குநர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை எடுப்பது தனது நீண்ட கால தாகம்  என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.