நான் ஒரு பச்ச மண்ணு…என்னியப்போய் இப்படி…கதறிய காஞ்சனா நடிகை !

 

நான் ஒரு பச்ச மண்ணு…என்னியப்போய் இப்படி…கதறிய காஞ்சனா நடிகை !

காஞ்சனா 3 படத்தின் நாயகி அலெக்ஸாண்டர் தான் யார் மீதும் பாலியல் புகார் அளிக்கவில்லை என்று பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

சென்னை: காஞ்சனா 3 படத்தின் நாயகி அலெக்ஸாண்டர் தான் யார் மீதும் பாலியல் புகார் அளிக்கவில்லை என்று பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

நடிகர் ராகவ லாரன்ஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காஞ்சனா 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அலெக்ஸாண்டர்.விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்த இவருக்கு படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் நடிகர் லாரன்ஸ் இதில் வாய்ப்பு அளித்துள்ளார். 

இவர் சமீபத்தில் காவல் நிலையத்தில் ரூபேஷ் குமார் என்பவர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளதாக பரவலாக செய்திகள் பரவ ஆரம்பித்தது. 

பலரும் உடனே காஞ்சனா 3 படத்தின் கதாநாயகிக்கு பாலியல் தொல்லை என்று செய்தி பரப்ப தொடங்கியதால் அதிர்ச்சியடைந்த அலெக்ஸாண்டர் இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

RI DJAVI ALEXANDER

அதில் அவர் கூறியதாவது, ‘எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்ததாக வெளியான செய்தி அனைத்துமே போய். எனக்கும் வெறும் 22 வயசு தான் ஆகிறது. எனக்கு இன்னும் கல்யாண ஆசைகூட வரவில்லை? அப்படி இருக்கும் போது எனக்கு எப்படி கணவர் இருப்பார்? சரி எனக்கு குழந்தைகள் இருக்கு என்றால்… ஏன் பிரசவத்திற்குப் பின்னர் ஏற்படும் அந்த தொப்பை எங்கே சென்றது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

RI DJAVI ALEXANDER

மேலும் நான் எந்த ஒரு கவர்ச்சி போட்டோ ஷூட்டும் எடுக்கவில்லை, இது போன்ற செய்தி வெளியாவதைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது என்று பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

இதையும் படிங்க: ஜான்வி கபூரை தொடர்ந்து களத்தில் இறங்கும் குஷி கபூர்