நான் ஏன் ப்ராச்சிக்கிட்ட மன்னிப்பு கேட்கணும்? யாஷிகா போல்ட் டாக்!

 

நான் ஏன் ப்ராச்சிக்கிட்ட மன்னிப்பு கேட்கணும்? யாஷிகா போல்ட் டாக்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வலுவான போட்டியாளராக அறியப்பட்ட நடிகை யாஷிகா, மகத்தின் காதலி ப்ராச்சியிடம் மன்னிப்புக் கேட்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் வலுவான போட்டியாளராக அறியப்பட்ட நடிகை யாஷிகா, மகத்தின் காதலி ப்ராச்சியிடம் மன்னிப்புக் கேட்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 கடந்த சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது. இந்த சீசன் டைட்டில் வின்னராக ரித்விகா அறிவிக்கப்பட்டார். பிக் பாஸ் போட்டியி வலுவான, இறுதிப்போட்டிக்கு தகுதியான போட்டியாளராக திகழந்த யாஷிகா காரணமின்றி வெளியேற்றப்பட்டது பார்வையாளர்களை அதிருப்தியடையச் செய்தது.

mahat

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் மகத்துடன் காதலில் விழுந்த யாஷிகா, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். சமீபத்தில் யாஷிகா அளித்த பேட்டியில், மகத் உள்ள என்கிட்ட லவ் பண்றேன்னு சொல்லிட்டு, வெளிய வந்து அவனோட கேர்ள் பிரெண்டோட சேர்ந்துட்டான். எனக்கு சந்தோஷம் தான். ஆனா என்ன ஏமாத்தின மாதிரி எனக்கு ஃபீலிங்க்ஸ் இருக்கு என்று கூறினார்.

mahat

மேலும், பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது ஒருவர் மீது ஒருவர் காட்டிய அன்பு காதலாக மாறிவிட்டது. அதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. காதலிய கழட்டிவிட்டுட்டு என்னோட இருக்க சொல்லி நான் மகத்கிட்ட சொன்னது இல்ல. நான் மகத் மேல இருந்த லவ்வ வெளிய சொல்லிட்டேன். அதுக்காக ப்ராச்சியிடம் மன்னிப்புக் கேட்க முடியாது. நான் பண்ணது தப்புன்னு நான் நினைக்கல என்று கூறியுள்ளார்.

mahat

மனதிபட்டதை வெளிப்படையாக பேசுவதாலேயே பார்வையாளர்களால் ரசிக்கப்பட்ட யாஷிகா, மகத் மீது காதல் வயப்பட்டார். தற்போது மகத் தனது காதலியுடன் சேர்ந்துவிட்டதால் மகிழ்ச்சி என்றாலும், அந்த காதல் தோல்வியில் இருந்து வெளியே வர சற்று கடினமாக இருப்பதாக யாஷிகா தெரிவித்துள்ளார்.