‘நான் எப்போதும் முரட்டு சிங்கள் தான்’: வதந்தி குறித்து பிரேம்ஜி விளக்கம்

 

‘நான் எப்போதும் முரட்டு சிங்கள் தான்’: வதந்தி குறித்து பிரேம்ஜி விளக்கம்

நடிகர் பிரேம்ஜி தான் எப்போதுமே முரட்டு சிங்கிளாக இருக்க விரும்புவதாகக் கூறி திருமணம் குறித்த வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் .

சென்னை: நடிகர் பிரேம்ஜி தான் எப்போதுமே முரட்டு சிங்கிளாக இருக்க விரும்புவதாகக் கூறி திருமணம் குறித்த வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் .

கங்கை அமரனின் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது வெங்கட் பிரபுவின் பார்ட்டி மற்றும் ஜோம்பி படத்தில் இசையமைத்துள்ளார். 40வயதாகும் இவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லையே என்று அவரைவிட அவரது ரசிகர்கள் கவலைப்பட்டு வருகின்றனர். 

இவர் கடந்த மாதம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ‘திருமணமான புகைப்படத்துடன் கேம் ஓவர் என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட்டை அணிந்திருந்தார். அதனால் அவர் விரைவில் திருமணத்திற்குத் தயாராகிவிட்டார் என்று வாழ்த்து மழை பொழிந்தது. 

இந்த நிலையில் இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘கேம் ஓவர் என்ற டி-சர்ட் அணிந்து ஒரு பதிவிட்டேன். அதனால் நிறைய பேரிடம் இருந்து வாழ்த்துகள் வந்தன. பலர் என்னைத் தொடர்பு கொண்டு யார் அந்த பெண், எப்போது திருமணம் என்றெல்லாம் கேட்டார்கள். இன்னும் நான் முரட்டு சிங்கிள் தான். அதனால் தான் முரட்டு சிங்கிள் என்ற டி-சர்ட் அணிந்து வந்திருக்கிறேன். நான் எப்போதுமே முரட்டு சிங்கிள் தான்’ என்று கூறியுள்ளார்.