‘நான் எப்பவும் உன்ன லவ் பண்ணுவேன்’: விடாமல் முகனை துரத்தும் அபிராமி

 

‘நான் எப்பவும் உன்ன லவ் பண்ணுவேன்’: விடாமல் முகனை துரத்தும் அபிராமி

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 46 நாள் கடந்துள்ளது. இந்த சீசன் தொடங்கிய முதல் நாள் முதல் காதல் என்ற ஒரு விஷயம் தான் பிக் பாஸ் வீட்டை சுற்றி வருகிறது. கவின், சாக்ஷி, லாஸ்லியாவின் காதல் லீலைகள் தற்போது ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. 

அது ஒரு பக்கம் இருக்க அபிராமி, முகனை காதலிப்பதாகக் கூறி தற்போது ஒரு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இந்த நிலையில் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் உன்மையை சொல்லு, இல்ல சொன்னதை செய் என்று ஹவுஸ் மேட்ஸ்க்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. 

அதில் முதல் ஆளாக அபிராமியிடம், தர்ஷன் ‘இன்று தான் இந்த வீட்டில் உன்னுடைய கடைசி நாள் என்றால், முகனிடம் என்ன சொல்லிவிட்டு வெளியேறுவாய்? என்று கேட்டார். அதற்கு அபி, ‘உன்கூடையே வெளியே வர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. நான் உன்ன ரொம்ப ரொம்ப காதலிக்கிறேன். கண்டிப்பா நீ இந்த கேமில் வெற்றி பெற்று வரவேண்டும். வெளியே சென்ற பிறகு இந்த காதல் மாறி விடும் என்று நீ நினைக்கலாம் ஆனால் அது மாறாது. நான் இப்படியே தான் இருப்பேன்’ என்று தொடர்ந்து முகனை, அபிராமி துரத்தி கொண்டே இருக்கிறார்.