‘நான் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன்: நடிகை சன்னி லியோன் ஓபன் டாக்! 

 

‘நான் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன்: நடிகை சன்னி லியோன் ஓபன் டாக்! 

நான் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன் என்று நடிகை சன்னி லியோன் கூறியுள்ளார்.

மும்பை:  நான் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன் என்று நடிகை சன்னி லியோன் கூறியுள்ளார்.

பாலிவுட்டின் பேபி டால் என்று அழைக்கப்படுபவர் நடிகை சன்னி லியோன். இவர் திரைத்துறையைத் தொடர்ந்து தற்போது வணிகத் தொழிலிலும் கால் பதித்துள்ளார். சமீபத்தில் இவர் மும்பையில் நடந்த ஆடைக் கண்காட்சியில் கலந்துகொண்டு தனக்குச் சொந்தமான ‘இன்பேமஸ்’ எனும் ஆடை நிறுவனத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது பேசிய சன்னி லியோன், ‘நான் பிரபலமாக இருப்பதால் தினமும் என்னைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால் அது என்னை எந்த விதத்திலும் தொந்தரவு செய்வதில்லை’ என்றார். 

sunny

அதைத்தொடர்ந்து, நீங்கள் அணியும் ஆடை குறித்து வரும் விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் எனச் செய்தியாளர் கேள்வி எழுப்பினர். ‘நான் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன். எனக்கு டீஷர்ட் மற்றும் ஜீன்ஸ் போன்ற ஆடைகள் அணியப் பிடித்தால் நான் அணிவேன். என் ஆடை, என் உரிமை. இது போன்ற விமர்சனங்களை நான் கண்டுகொள்வதில்லை’ என்றார்.