நான் இப்ப ரொம்ப நல்ல பையன்: காதலால் ரன்வீரை மாற்றிய தீபிகா

 

நான் இப்ப ரொம்ப நல்ல பையன்: காதலால் ரன்வீரை மாற்றிய தீபிகா

தீபிகா படுகோனை திருமணம் செய்த பிறகு வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என ரன்வீர் சிங் பகிர்ந்துள்ளார்.

தீபிகா படுகோனை திருமணம் செய்த பிறகு வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என ரன்வீர் சிங் பகிர்ந்துள்ளார்.

தீபிகா படுகோனை திருமணம் செய்த பின்னான வாழ்க்கை குறித்து ரன்வீர், நான் நேரத்த்தில் எழுந்து, நேரத்தில் சாப்பிட்டு, நேரத்தில் வேலைக்கு சென்று, நேரத்தில் வீடு திரும்புகிறேன். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நான் இப்ப ரொம்ப நல்ல பையனா மாறிட்டேன் என கூறினார்.

deepika

தீபிகா குறித்து அவர், நான் என் வாழ்க்கையில் சந்தித்த அற்புதமான மனிதர் தீபிகா. இதை அவர் என் மனைவி என்பதற்காக கூறவில்லை. தீபிகா பற்றி என்னுடைய உணர்வுகளை எல்லாம் சொல்ல வார்த்தைகள் தேடிக் கொண்டிருக்கிறேன், அது சவாலான ஒன்றாக இருக்கிறது. இந்த உலகத்திலேயே நான் தான் அவருக்கு நெருக்கமான மனிதனாக இருக்க முடியும். தீபிகா காதல், அன்பு, கருணை என பல்வேறு உணர்வுகள் நிறைந்த ஒரு உலகை தனக்குள் உருவாக்கி வைத்திருக்கிறார். இந்த குணம்தான் அவரை சிறந்த நடிகராக மாற்றியிருக்கிறது. உலகத்தில் உள்ள தலைசிறந்த நடிகர்களில் அவரும் ஒருவர் என புகழ்ந்து தன் வெப்சைட்டில் பதிவு செய்திருக்கிறார்.