நான் அவருடன் குடித்து விட்டு நடனம் ஆடவில்லை: நடிகை ஷாலு ஷம்மு ஓபன் டாக்!
குடித்து விட்டு நடனம் ஆடுகிறார் என்று எழுந்த குற்றச்சாட்டுக்கு நடிகை ஷாலு ஷம்ம விளக்கமளித்துள்ளார்.
சென்னை: குடித்து விட்டு நடனம் ஆடுகிறார் என்று எழுந்த குற்றச்சாட்டுக்கு நடிகை ஷாலு ஷம்ம விளக்கமளித்துள்ளார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர் ஷாலு ஷம்மு. இதை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதே போல் சில வாரங்களுக்கு முன்பு நடிகை ஷாலு ஷம்மு குட்டையான ஆடை அணிந்தபடி நடனம் ஆடும் வீடியோ ஒன்றும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் பிரபல இணையதள ஊடகம் ஒன்றிற்கு நடிகை ஷாலு பேட்டியளித்துள்ளார். அதில், அம்மாவுக்கு நான் சினிமாவில் நடிக்கணும்னு ஆசை.அதனால தான் சினிமாவுல நடிக்க வாய்ப்பு தேடினேன். ஒருநாள் பிரபல இயக்குநர் ஒருவரிடம் வாய்ப்பு கேட்கும்போது, ஓகே சொன்ன அவர் திடீர்ன்னு ஒருநாள் போன் பண்ணி அவர் வீட்டுக்கு வர சொன்னார். நான் அங்க போனதும், உனக்காக ஏ.சி போட்டிருக்கேன், ரூமுக்குள்ளே போ என்று வேறுமாதிரியான தொனியில் சொல்ல, நான் அவரிடம் ஏதேதோ சொல்லி தப்பித்து அங்கிருந்து வீட்டுக்கு வந்தேன். இப்படி பல அனுபவங்கள் நடிகைளுக்கு உண்டு. அதனால் தெரிந்தவர்கள் சொல்லும் வாய்ப்பை மட்டுமே தேர்வு செய்கிறேன்’ என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், சமீபத்தில் என்னுடைய லத்தின் டான்ஸ் வீடியோ ஒன்று வைரலானது. அதில் நான் குடிச்சுட்டு ஆடுறதா பலபேர் கமெண்ட் பண்ணியிருந்தாங்க. நான் குடிக்கல. அங்க இருந்தவங்க எல்லாரும் டான்ஸர்ஸ். என் கூட ஆடுனவரும் டான்ஸர் தான். என் பாய் ஃப்ரெண்ட் இல்லை’ என்று விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக மீடூ விவகாரம் பற்றி பேசிய ஷாலு, தமிழில் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிப்பதற்கு இயக்குநர் ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாக குற்றச்சாட்டியது குறிப்பிடத்தக்கது