‘நான் அவன் இல்லை’ பாணியில் 9 பெண்களை திருமணம் செய்த 23 வயது இளைஞர்… காதல் மன்னனின் லீலைகள்!!

 

‘நான் அவன் இல்லை’ பாணியில் 9 பெண்களை  திருமணம் செய்த 23 வயது இளைஞர்…  காதல் மன்னனின் லீலைகள்!!

கடந்த 5 மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் குடும்பம் நடத்தி  வந்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். 23 வயதான அவர் அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்துள்ளார். இவரும்  கருவிழிக்காடு கிராமத்தை சேர்ந்த சத்யா என்ற  பெண்ணை கடந்த 5 மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் குடும்பம் நடத்தி  வந்துள்ளார். 

love

இந்நிலையில் திடீரென்று சந்தோஷ் காணாமல் போக காதல் கணவன் காணவில்லை என்று போலீசில்  புகார் கொடுத்துள்ளார் சத்யா. இதனிடையே திருப்பூரை சேர்ந்த சசிகலா (19) என்ற இளம்பெண்ணை சந்தோஷ் காதலித்து திருமணம் செய்துகொண்டு, ஒக்கநாடு பகுதியில் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. 

marriage

இதனால் அதிர்ச்சியடைந்த சத்யா   இதுகுறித்து ஒரத்தநாடு காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சந்தோஷ் இதுவரை 8 பெண்களை  காதலித்து திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்தது. இளம்பெண்களைக் குறிவைத்து காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து வந்துள்ளார். சில மாதங்கள் அவர்களுடன் குடும்பம் நடத்திவிட்டு அவர்களை விட்டுச்செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதை தொடர்ந்து சந்தோஷை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.