நான் அதிமுககாரர்தான் ஆனா நோட்டாவுக்குதான் வாக்களித்தேன்- நடிகர் ஆனந்த் ராஜ்

 

நான் அதிமுககாரர்தான் ஆனா நோட்டாவுக்குதான் வாக்களித்தேன்- நடிகர் ஆனந்த் ராஜ்

நான் நோட்டாவுக்கு தான் வாக்கு அளித்தேன், நோட்டாவுக்கு வாக்கு அளித்த அனைவருக்கும் நன்றி என நடிகர் ஆனந்த் ராஜ் தெரிவித்துள்ளார். 

நான் நோட்டாவுக்கு தான் வாக்கு அளித்தேன், நோட்டாவுக்கு வாக்கு அளித்த அனைவருக்கும் நன்றி என நடிகர் ஆனந்த் ராஜ் தெரிவித்துள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆனந்த் ராஜ், “தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவிற்கும், பிரதமர் மோடிக்கும் வாழ்த்துகள். பிரதமர் மோடி எங்களுடைய திட்டங்களை எங்களிடம் சொல்ல வேண்டும். வரும் காலத்தில் நோட்டா இன்னும் வளராமல் பார்த்து கொள்ள வேண்டும்பாஜக அரசு மாற்றான் தாய் மனப்பான்மை இல்லாமல் செயல்பட வேண்டும். கமல் இன்னும் வளர வாழ்த்துகள்.

டிடிவி தினகரனால் அதிமுகவின் வாக்கு சிதறி இருக்கிறது. திமுகவின் வாக்கு கணிசமாக அதிகரித்து இருக்கிறது. அதிமுகவின் தோல்வியில் எனக்கு பங்கு கிடையாது. அன்புமணிக்கு ராஜ்யசபா பதவி கொடுக்க கூடாது. டிடிவி தினகரன் அங்கீகாரம் மக்களுக்கு தெரிந்துவிட்டது. இந்த நிமிடம் வரை நான் அதிமுகவில் தான் இருக்கிறேன். ஆனால் நான் நோட்டாவுக்கு தான் வாக்கு அளித்தேன், நோட்டாவுக்கு வாக்கு அளித்த அனைவருக்கும் நன்றி. இனி தமிழகத்தில் நடப்பது மக்கள் ஆட்சியாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.