நான்கு மாத கருவுடன் தூக்கில் தொங்கிய புதுப்பெண்: பரபரப்பு சம்பவம்!

 

நான்கு மாத கருவுடன் தூக்கில் தொங்கிய புதுப்பெண்: பரபரப்பு சம்பவம்!

திருமணமான ஐந்தே மாதங்களில், கர்ப்பிணி பெண்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காட்டுமன்னார்கோவில் : திருமணமான ஐந்தே மாதங்களில், கர்ப்பிணி பெண்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காட்டுமன்னார்கோவிலுக்கு அருகில் உள்ள குறுங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ராஜசெந்தூரான் என்பவருக்கும் அரியலூரை சேர்ந்த செல்வ சுந்தரி என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது.  ராஜசெந்தூரான் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார். ராஜசெந்தூரான் தினமும் குடித்து விட்டு வந்துள்ளார். இதனால் ராஜசெந்தூரானுக்கும் செல்வ சுந்தரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் 4 மாத கர்ப்பிணியான செல்வ சுந்தரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து மகளை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக செல்வ சுந்தரியின் தந்தை காட்டுமன்னார்கோவில் காவல்நிலையத்திற்குப் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ராஜசெந்தூரானை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

suicide

இந்நிலையில் செல்வ சுந்தரியின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு,  ராஜசெந்தூரான் தாய் மற்றும் தந்தையையும் கைது செய்யவேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தினர். திருமணம் ஆகி ஐந்து மாதங்களே ஆகியுள்ளதால், கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.