நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து இருவர் பலி!

 

நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து இருவர் பலி!

வடகிழக்கு பகுதி உள்ள  சீலம்புரில் நான்கு மாடி கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இதன் தரைதளத்தில்  நேற்றிரவு நிகழ்ச்சி ஒன்று நடந்தது

புதுடெல்லி: டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

delhi

டெல்லியின் வடகிழக்கு பகுதி உள்ள  சீலம்புரில் நான்கு மாடி கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இதன் தரைதளத்தில்  நேற்றிரவு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதற்காக ஏராளமான நபர்கள் கூடியிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. 

seelampur

இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கும் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.இதில் ஹீனா என்ற பெண் உள்பட இருவர் பலியாகினர். ஆறு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.