நான்கு ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை: இரண்டு குழந்தைகளுடன் மீட்ட போலீசார்; பதற வைக்கும் சம்பவம்!

 

நான்கு ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை: இரண்டு குழந்தைகளுடன் மீட்ட போலீசார்; பதற வைக்கும் சம்பவம்!

மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், வேலுச்சாமி ஆகியோர் கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

மதுரை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த  இளைஞரை  போக்சோ சட்டத்தில் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். 

abuse

மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், வேலுச்சாமி ஆகியோர் கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இதனால் அந்த சிறுமிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது. இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று அவர்கள் சிறுமியை மிரட்டி வந்ததாகத் தெரிகிறது.

arrested

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அண்ணா  நகர் போலீசுக்கு தகவல் கிடைக்க, சிறுமியை மீட்ட போலீசார் அவரை காப்பகத்திலும், அந்த சிறுமிக்கு பிறந்த குழந்தைகளைத் தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் அரசிடம் ஒப்படைத்தனர்.  இதுகுறித்து வழக்கு பதவி செய்த போலீசார்,  வேலுச்சாமியைக் கைது செய்ததுடன்,  தலைமறைவாக உள்ள விஜயகுமாரை தேடி வருகின்றனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சிறுமியை இருவர் பாலியல் வன்கொடுமை செய்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.