நானா இருந்தா நடக்குறதே வேற – ட்விட்டரில் கஸ்தூரி

 

நானா இருந்தா நடக்குறதே வேற – ட்விட்டரில் கஸ்தூரி

பெண்ணை நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்த எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறைக்கு சென்றிருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதான் இல்ல. காரணம் அவர் சாதா எம்.எல்.ஏ இல்லை பாஜக எம்.எல்.ஏ. எவ்வளவு மக்கள் விரோத கொள்கைகளை கொண்டிருந்தாலும், பாஜகவுக்கு திரும்பவும் வாக்குகள் சர்வசாதாரணமாக கிடைப்பதுபோல, தவானி எம்.எல்.ஏ. கையில் ராக்கி கட்டிவிட்டு சமாதானமாக சென்றிருக்கிறார் பாதிக்கப்பட்ட நித்து.

குஜராத் பாஜக‌ எம்.எல்.ஏ. பல்ராம் தவானி, தன்னை சந்திக்க வந்த நித்து தேஜ்வானி என்ற பெண்ணை நடுரோட்டில் அடித்து உதைத்தது வீடியோ காட்சிகளாக வெளியாகி கண்டனத்திற்கு ஆளாகியது. அடுத்து என்ன நடந்திருக்கும்? பெண்ணை நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்த எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறைக்கு சென்றிருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதான் இல்ல. காரணம் அவர் சாதா எம்.எல்.ஏ இல்லை பாஜக எம்.எல்.ஏ.  எவ்வளவு மக்கள் விரோத கொள்கைகளை கொண்டிருந்தாலும், பாஜகவுக்கு திரும்பவும் வாக்குகள் சர்வசாதாரணமாக கிடைப்பதுபோல, தவானி எம்.எல்.ஏ. கையில் ராக்கி கட்டிவிட்டு சமாதானமாக சென்றிருக்கிறார் பாதிக்கப்பட்ட நித்து.

Balram Thawani

சம்பவம் நடந்த அடுத்தநாள் மீடியாவை சந்தித்த தவானி, நித்துவை அழைத்து வந்திருந்தார். “நான் அவரை அடித்தது தவறு, இனிமேல் அடிக்க மாட்டேன், இவர் எனக்கு சகோதரி  போன்றவர்” என வாட் கணக்கில் ஷாக் கொடுத்தார். அந்த ஷாக் பத்தாது என்று, தவானி கையில் ராக்கி கயிறை கட்டி நித்து வேறு தனியாக கிலோவாட் கணக்கில் ஷாக் கொடுத்தார். என்னடா நடக்குது இங்க என எல்லாரும் தலையை பிய்த்துக்கொள்ள, இந்த சம்பவம் குறித்து நம்ம கஸ்தூரி ட்விட்டரில் (திரும்பவும்) பொங்கியிருக்கிறார்.

“நாடு முழுவதும் இதுபோன்ற கொடூர புத்தி படைத்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், வெட்கம் பல்ராம் தவானி, ராக்கி கட்டிக்கொள்வதெல்லாம் சகிக்கலை, ஒருவேளை நித்து இடத்தில் நான் இருந்திருந்தால் நடக்குறதே வேற” என ட்வீட்டரில் கோபம் கொப்பளித்திருக்கிறார் கஸ்தூரி!