நாட்டை வழிநடத்த மம்தா பானர்ஜி திறமையான தலைவர்: கர்நாடக முதல்வர் குமாரசாமி புகழாரம்

 

நாட்டை வழிநடத்த மம்தா பானர்ஜி திறமையான தலைவர்: கர்நாடக முதல்வர் குமாரசாமி புகழாரம்

நாட்டை வழிநடத்த மம்தா பானர்ஜி திறமையான தலைவர் என கர்நாடக முதல்வர் குமாரசாமி புகழாரம் சூடியுள்ளார்

பெங்களூரு: நாட்டை வழிநடத்த மம்தா பானர்ஜி திறமையான தலைவர் என கர்நாடக முதல்வர் குமாரசாமி புகழாரம் சூடியுள்ளார்.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. பாஜகவுக்கு எதிரான கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெற்ற அந்த மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் குமாரசாமி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், முன்னாள் பிரதமர் தேவகவுடா, அகிலேஷ் யாதவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், : நாட்டை வழிநடத்த மம்தா பானர்ஜி திறமையான தலைவர் என கர்நாடக முதல்வர் குமாரசாமி புகழாரம் சூடியுள்ளார். பிரதமர் மோடி நிர்வாகத்தால் நாட்டு முற்றிலும் ஏமாற்றமடைந்துள்ளனர் என சாடிய குமாரசாமி, தேர்தலுக்கு முன்பு ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை தலைமையை தீர்மானித்தல் என்பது தேர்தல் வெற்றி பெற ஒரு அளவுகோல் அல்ல என்றும் விளக்கமளித்தார்.

திறமையான தலைவர்கள் நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும் என குறிப்பிட்ட குமாரசாமி, மம்தா பானர்ஜி எளிமையான மிகவும் சிறந்த நிர்வாகி ஆவார். நாட்டை வழி நடத்த மம்தா பானர்ஜி திறமையான தலைவர் என தாம் நினைப்பதாக தெரிவித்தார்.