நாட்டை பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம்: அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பதிலடி

 

நாட்டை பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம்: அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பதிலடி

நாட்டை பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம் நடிகர்கள் வந்து என்ன செய்ய போகிறார்கள் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.

சென்னை: நாட்டை பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம் நடிகர்கள் வந்து என்ன செய்ய போகிறார்கள் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், நான் முதலமைச்சரானால் முதல்வராக நடிக்கமாட்டேன் உண்மையாக இருப்பேன் என பேசினார். அவரது இந்த பேச்சு அரசியல் அரங்கில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்நிலையில் விஜய்யின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அமைச்சர் ஆர்,பி உதயகுமார், நடிகர் விஜய் எப்போது அரசியலில் குதிக்கலாம் என காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. விஜய் அரசியலில் குதிக்க அவரது தந்தை வலையெல்லாம் கட்டி ஏற்பாடு செய்துள்ளார்.

புரட்சித்லைவர் எம்ஜிஆருக்கு இணையாக இந்த நாட்டில் யாரும் இல்லை. சினிமாவில் வேஷம் போடுவதுதான் உங்கள் வேலை. அதனை சரியாக செய்யுங்கள். நாட்டை பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம் என்றார்.