நாட்டைக் காக்க ஒன்றுபடுவோம் – வைரமுத்து ட்வீட்

 

நாட்டைக் காக்க ஒன்றுபடுவோம் – வைரமுத்து ட்வீட்

மக்கள் ஊரடங்குக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகிவரும் நிலையில் நாட்டைக் காக்க, நம்மைக் காக்க தனிமைப்படுத்துவோம் என்று கவிஞர் வைரமுத்து ட்வீட் வெளியிட்டுள்ளார்.

மக்கள் ஊரடங்குக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகிவரும் நிலையில் நாட்டைக் காக்க, நம்மைக் காக்க தனிமைப்படுத்துவோம் என்று கவிஞர் வைரமுத்து ட்வீட் வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்து மக்கள் ஊரடங்கைப் பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். இதன் அடிப்படையில் நாடு முழுவதும் பஸ், மெட்ரோ ரயில் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள் மூடப்படும் என்று வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
“நம்மைக் காத்தல்;
நாடு காத்தல்.
இரு அறைகூவல் எதிரே.
தனிமைப்படுவோம்
நம்மைக் காக்க;
பின்
ஒன்று படுவோம்
நாடு காக்க.
#CoronaStopKaroNa #coronavirusindia 
#IndiaFightsCorona” என்று குறிப்பிட்டுள்ளார்.