நாட்டுக்கே வழிகாட்டுகிறார் மதுரை எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.பி.டி.

 

நாட்டுக்கே வழிகாட்டுகிறார் மதுரை எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.பி.டி.

கடந்த மூன்று வருடங்களாக வெளியிட்டுவரும் தொகுதி மேம்பாட்டுப் பணி விவரங்கள் அடங்கிய ஐந்து அறிக்கைகள், அதில் ஒவ்வொரு வார்டுக்கும் என்ன செய்யப்பட்டது, எவ்வளவு ரூபாய் எந்\தெந்த விதங்களில் செலவிடப்பட்டது போன்ற விவரங்கள் விளக்கமாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.

துருவ் ரதீ என்ற பிரபல சோஷியல் மீடியா ஆக்டிவிஸ்ட், அவருடைய ட்விட்டர் கணக்கில் ‘மக்கள் பிரதிநிதிகள், தங்கள் தொகுதிக்குச் செய்யும் பணிகள் பற்றி ஏன் ஆண்டுதோறும் அறிக்கையாக வெளியிடுவதில்லை? இதற்காகச் சட்டம் இயற்ற வேண்டும்’ என பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். மேற்படி வீடியோவைக் கண்ட மதுரை மத்திய தொகுதி திமுக எம்.எல்.ஏ. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அதற்கு மறுமொழியாக, “தம்பி நீங்க ரொம்ப லேட்டு, நீங்கள் கேட்டது மாதிரி ஆண்டுக்கொருமுறை அல்ல, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என்னுடைய தொகுதிப்பணிகள் குறித்து தொகுதி மக்களுக்கு அறிக்கை சமர்ப்பித்து வருகிறேன்” என பதில் அளித்திருந்தார்.

Dhuruv Rathee

தமிழகத்திலிருந்து இந்த மாதிரி முன்மாதிரி நடவடிக்கையா? அதுவும் திமுக எம்.எல்.ஏவான நீங்களா, சான்சே இல்லை, அப்படி செய்திருந்தால், அதற்கான ஆதாரங்களை அனுப்புங்கள் என பதிலளித்த துருவிற்கு, மேல்நாட்டு வங்கியில் உயர்பதவி வகித்த தியாகராஜன் பக்கம் பக்கமாக ஆதாரங்களை சமர்ப்பித்திருக்கிறார். கடந்த மூன்று வருடங்களாக வெளியிட்டுவரும் தொகுதி மேம்பாட்டுப் பணி விவரங்கள் அடங்கிய ஐந்து அறிக்கைகள், அதில் ஒவ்வொரு வார்டுக்கும் என்ன செய்யப்பட்டது, எவ்வளவு ரூபாய் எந்\தெந்த விதங்களில் செலவிடப்பட்டது போன்ற விவரங்கள் விளக்கமாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. அது மட்டுமல்லாமல், தொகுதி மக்கள் தியாகராஜனிடம் கொடுத்த மனுக்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, எத்தனை மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்கப் படாமல் இருக்கிறது உள்ளிட்ட விவரங்களும் அளிக்கப்பட்டது. ஆதாரம் கேட்டவர்கள் ஆடிப்போய், லைக், ஷேர், ரீட்வீட் என தியாகராஜனை கொண்டாடிவிட்டார்கள்.