நாட்டில் முதல்முறையாக ஒரே நாளில் 78 ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு!

 

நாட்டில்  முதல்முறையாக ஒரே நாளில் 78 ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு!

எம்டிஎன்எல் நிறுவனங்களிலிருந்து கிட்டத்தட்ட 92 ஆயிரம் ஊழியர்கள்  இன்று விருப்ப ஓய்வு பெறுகின்றனர்.

நாட்டில்  முதல்முறையாக ஒரே நாளில் அரசுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களிலிருந்து கிட்டத்தட்ட 92 ஆயிரம் ஊழியர்கள்  இன்று விருப்ப ஓய்வு பெறுகின்றனர்.

ttn

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்  தொடர்ந்து நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் அதன் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  இதையடுத்து ஆயிரக்கணக்கானோர் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்திருந்தனர். 

ttn

இந்நிலையில் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 786 பேர் பணியாற்றிய நிலையில், 78 ஆயிரத்து 569 பேர் இன்று விருப்ப ஓய்வு பெறுகின்றனர். அதேபோல்  எம்டிஎன்எல் நிறுவனத்திலிருந்தும்  14 ஆயிரத்து 378 பேர் விருப்ப ஓய்வு பெறுகின்றனர்.