நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது – மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்

 

நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது – மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்

நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை கடந்து செல்வதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

கொல்கத்தா: நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை கடந்து செல்வதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி  குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் மீது மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அந்த வகையில் அவர் இன்று (செப்.15) பதிவிட்ட டிவிட்டர் பதிவில் நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை கடந்து செல்வதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது பதிவில், “இன்று சர்வதேச ஜனநாயக தினம். ஆனால் நமது நாடு சூப்பர் எமர்ஜென்சி நிலையை நோக்கி செல்வது எனக்கு வேதனை ஏற்படுத்துகிறது. எனவே, நமது நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக 2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறி உள்ளார்.

முன்னதாக பெங்காலி தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று மம்தா அளித்த பேட்டியில் 2014-ஆம் ஆண்டு 31 சதவிகித வாக்குகளை பெற்று பாஜக மத்தியில் ஆட்சியமைத்து போல் 2019-ஆம் ஆண்டு மீண்டும் நடக்காது” என்று தெரிவித்திருந்தார்.